15.03.2026 அன்று சென்னையின் கடைசியில் உள்ள ஒரு குக் கிராமமான ஆத்தூர் கிராமத்தில் மடிப்பு நுண்நோக்கிப் பயிற்சி நடைபெற்றது. இதற்கு அக் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் பயிற்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். இதில் கிராமத்தைச் சுற்றி உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 30 மாணவர்களும் 10 தொண்டர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியினை தனஞ்செயன் தன்னுடைய வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார். அவர் குடும்பம் முழுவதும் இந்த பயிற்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். அது ஞாயிற்றுக்கிழமை என்பது குறிப்பிட தக்கது. அந்த விடுமுறை நாளில் 40க்கும் மேற்பட்டோரை ஒருங்கிணைத்து பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பெரிதும் போற்ற தக்கது. இந்த பயிற்சியில் பல்வேறு மலர்களின் மகரந்தம், இலைத்துளைகள், இலைகளின் உள்ளமைப்பு, தாவர செல் மற்றும் பேன், ஈறு,முடி போன்றவை பதிவு செய்யப்பட்டன. பெரும்பான்மையான ஆசிரியர்கள், தொண்டர்கள் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!