ஒரு நாள் நான் இல்லாத போது மடிப்பு நுண்ணோக்கியில் தண்ணீர் மாதிரியை இனியன் பதிவு செய்ய முயற்சி செய்துள்ளான். அப்போது அவன் மேலே வெளிச்சத்திற்காக தூக்கும் போது தண்ணீர் கீழே வடிந்துவிட்டதாம். அதனால் தண்ணீர் சிந்தாமல் இருக்க அதனை படுக்கை வசத்தில் வைத்தும் அதே சமயத்தில் வெளிச்சம் புகும் வடிவில் அமைக்க வேண்டும் என்று யோசித்து ஒரு ஸ்டான்டு வடிவமைக்க வேண்டும் என்றான். எனக்கு அது என்ன செய்வது என்று தெரியவில்லை. அவன் மாமாவோடு இணைந்து ஒரு மடிப்பு நுண்ணோக்கி ஸ்டான்டை செய்துவிட்டான். வீட்டில் கிடந்த பழைய கட்டைகளை எடுத்து ஒரு ஸ்டான்ட் செய்து விட்டான். இரவு நேரங்களிலும் அது வெளிச்சத்தை பெறுவதற்கு உதவியாக இருக்கிறது. பரவலாகவும் வெளிச்சம் கிடைக்கிறதுக்கு பெரிதும் உதவுகிறது. அற்புதமான வடிவமைப்பு.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!