இது இனியனின் பதிவு. பள்ளியிட்டு வரும்போது கையில் தட்டானோடே வந்தான். வந்தவன் கால், இறகு, கண்களை பார்த்து ஆச்சரியப்பட்டான். அவன் பள்ளியில் அறிவியல் பாடத்தில் தட்டான் குறித்தப் பாடத்தில் கூட்டுக்கண்கள் பற்றி சொன்னார்களாம். தட்டாணுக்கு 2000 கண்கள் என்றார்களாம். உண்மையாகவே 2000ம் கண்கள் இருக்குமா? யோசித்துக்கொண்டே வந்தவன்தான் கையில் தட்டானோடு வந்துவிட்டான். மடிப்பு நுண்ணோக்கியில் கண்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தான். பள்ளிக்கு எடுத்துச் சென்று தன் சக நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் காட்டி ஆச்சரியப்பட வைத்துள்ளான்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!