புத்தாண்டு தொடக்க நாளான 01.01.2021அன்று மடிப்பு நுண்ணோக்கி களப் பயணமாக திருப்பரங்குன்றத்தில் உள்ள சரவணப் பொய்கையில் மாதிரிகளை பதிவு செய்வது என்பதும், ஒரு வார களப்பயணத்தை நிறைவு செய்வது என்பதையும் கொண்டதாக அமைந்திருந்தது. இதில் நண்பரும் அறிவியல் ஆசிரியருமான முத்துக்கிருஷ்ணன் இறுதிநாளில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இன்றைய நாள் நிறைய பதிவுகளை கொண்ட நாளாக அமைந்திருந்தது. படங்களும் வீடியோக்களும் தெளிவாக இல்லை என்றாலும் குழந்தைகள் இந்த நாட்களில் நிறைய தண்ணீர் மாதிரிகளை கையாளப்பழகிக்கொண்டனர் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இந்த காலம் அவர்களுக்கு இந்த கோவிட் காலத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!