இறந்து போன வண்ணத்துப் பூச்சியை இனியன் தன்னுடைய ஜியாமெண்டரி பாக்ஸ்லிருந்து எடுத்து வந்திருந்தான். அதன் இறகை தொட்டதும் கைகளில் பவுடர் போல ஒட்டிக்கொண்டது. வண்ணத்துப் பூச்சியின் இறகு. அதனை தொட்டதும் கையில் ஒட்டிக்கொள்ளும் பவுடர் போன்ற பகுதியை எடுத்து Foldscope ல் வைத்து பதிவு செய்யப்பட்டது. அற்புதமான பதிவு. அது மீன் செதில்கள் போல காணப்பட்டது. வெளியில் பார்க்கும் போது பச்சை மற்றும் கறுப்பு வண்ணத்தில் இருந்தது. உள்ளே பார்த்தபோது அதற்கான அறிகுறியே தெரியவில்லை. வேறு வண்ணத்தில் தெரிந்தது. உள்ளே அந்தசெதில் போன்ற பகுதியில் வெளிச்சம் ஊடுருவிச் சென்றதை பார்க்க முடிந்தது. குழந்தைகள் ஆச்சரியத்தின் உ்ச்சத்திற்கே சென்றனர். அவர்கள் கேட்ட கேள்வி இதுதான். பச்சவண்ணம் தோன்ற எது காரணம்?
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!