24வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மடிப்பு நுண்ணோக்கி
கண்காட்சி கோவை கே.பி. ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் 250 பள்ளிகளிலிருந்து 1500 மாணவர்கள், 250 ஆசிரியர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் 30 மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சி 100 புகைப்படங்களை கொண்டு அமைக்கப்பட்டது. கண்காட்சி
யை காணவருவோருக்கு மடிப்பு நுண்ணோக்கி கையாளும் விதம், பயன்படுத்தும் விதம், சிலேடு தயாரிக்கும் வழிமுறை ஆகியவற்றிற்கு பயிற்சி வழங்கப்பட்டது. பெரும்பான்மையான பள்ளிகள் அரசு பள்ளிகள். அவர்களுக்கு இந்த மடிப்பு நுண்ணோக்கி பெரிதும் உதவும் என்றும், கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்றும் கேட்டுச் சென்றனர். குழந்தை
கள் மாணவர்கள் மடிப்பு நுண்ணோக்கியில் பல்வேறு பொருட்களை பார்த்து ஆச்சரியமைடைந்தனர். என்னுடன் இணைந்து திருப்பூர் ஈஸ்வரன், கோவை ரமேஸன் ஆகியோர் கண்காட்சியில் பங்கு பெற்றோருக்கு மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி வழங்கினர்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!