திண்டுகல் மாவட்டம், வத்தலகுண்டு வட்டம், அய்யம்பாளையத்தில் இளைஞர்களுக்கான ஒரு நாள் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஏற்பாட்டின் அடிப்படையில் 25 நபர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் திருச்சி மற்றும் திண்டுகல் மாவட்டத்திலிருந்து 19 இளைஞர்கள் 2ஆசிரியர்கள் 9 தொண்டர்கள் பங்கேற்றனர். பயிற்சியினை ஈடன் சைன்ஸ் கிளப் சார்பாக நானும் இனியனும் வழங்கினோம். வந்திருந்தோர் உற்சாகமாக பங்கேற்றனர். இந்த நிகழ்வு 1975ம் ஆண்டு தொடங்கப்பட்ட மெயின் ஸ் கூல் என்று சொல்லக்கூடிய பழமையான பள்ளியில் நடைபெற்றது. அனைத்து மடிப்பு நுண்ணோக்கியையும் அன்றைக்கே மைக்ரோ காஸ்மோஸ் பகுதியில் பதிவு செய்யப்பட்டுவிட்டன. இளைஞர்கள் படை திண்டுகல் மாவட்டம் முழுவதும் எடுத்துச் செல்ல உறுதி அளித்துள்ளனர். பங்கேற்பாளர்களுக்கான மதிய உணவு அருகில் நடைபெற்ற திருமணவீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அற்புத நிகழ்ச்சி. மக்களின் பங்களிப்போடு மடிப்பு நுண்ணோக்கி பரவலாக்கப்பட்டு வருவது பெருமைக்குறியதே. தொடர்ந்து செயல்படுவோம்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!