மதுரையில் உள்ள டிவிஎஸ் நகர் பூங்காவில் மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு கண்காட்சி நடத்தப்பட்டது. 16.06.2018 அன்று காலை 7 மணிக்கு கண்காட்சி தொடங்கி 9. 30 மணிவரை நடை பெற்றது. இதில் 150க்கும் மேற்பட்ட படங்கள் மடிப்பு நுண்ணோக்கியில் பதிவு செய்யப்பட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர். அத்துடன் 15 ஈடன் சைன்ஸ் கிளப் மாணவர்கள் தங்களுடைய மைக்ராஸ்கோப்புடன் வந்திருந்து அங்கே கண்காட்சியை காண வந்தவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கியின் செயல்பாடு மற்றும் அதன் சிறப்பு குறித்து விளக்கம் அளித்ததோடு அவர்களை காணவைக்கவும் செய்திருந்தனர். அற்புதமான இந்த செயல்பாட்டினை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மதுரை மாவட்டம் செய்திருந்தது.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!