மதுரை மருத்துவக் கல்லூரியில் உள்ள மருந்தாளுனர்களுக்கான ஒருநாள் மடிப்பு நுண்ணோக்கிப் பயன்பாடு கற்றுக்கொடுக்கப்பட்டது. இயக்குனர் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மடிப்பு நுண்ணோக்கி இருந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று கூறினார். தற்போது இருக்கும் நுண்ணோக்கியை மாணவர்கள் வரிசையில் நின்று பார்க்க வேண்டிய சூழல் இருப்பதாக கூறினார். மடிப்பு நுண்ணோக்கியின் செயல்பாடு குறித்து அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்ததாக கூறினர். மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மடிப்பு நுண்ணோக்கி இருந்தால் பல்வேறு ஆய்வுகளை தனித்தனியாக செய்யமுடியும் என்று கூறினர். என்னால் அந்த வாய்ப்பை வழங்க முடியவில்லை. நிகழ்ச்சி அன்று அவர்கள் வாழைப்பழத்தை பாதிக்கும் ஒரு பூச்சியை குறித்து பதிவு செய்தனர். மேலும் அதன் கூட்டுக் கண்களையும் பதிவு செய்ய முயற்சி மேற்கொண்டனர். அத்தோடு அல்லாமல் அவர்கள் கையில் கொண்டுள்ள தயாரிக்கப்பட்ட மாதிரி சிலேடுகளை தங்களுடைய கைபேசியில் பதிவு செய்து கொண்டனர். அவர்கள் பதிவு செய்த சில மாதிரிகள் இங்கே பதிவு செய்துள்ளேன்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!