26வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு, தமிழகத்தில் கோவையில் உள்ள கேபிஆர். பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. மூன்று நாள் நடைபெற்ற இந்த நிழக்ச்சியில் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியல் கலந்து கொள்ளுவதற்கு இனியனும் நானும் பங்கேற்க சென்றோம். அந்த நிகழ்ச்சியில் கனகராஜ்ம் கலந்து கொண்டார். முதல் நாள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு அந்த கல்லூரி வளாகத்தில் உள்ள பூக்களையும் அதன் மகரந்தங்களையும் பதிவு செய்வது என்று முடிவு செய்தோம். மூன்று பேரும் சேர்ந்து செயலில் இறங்கினோம். சுமார் 20க்கும் மேற்பட்ட பூக்களையும் அதன் மகரந்தங்களையும் பதிவு செய்தோம். அதே வேளையில் நாங்கள் பதிவு செய்து கொண்டிருந்த இடத்தில் இருந்த வாகன ஓட்டிகளுக்கும், அக் கல்லூரி மாணவர்களுக்கும் மடிப்பு நுண்ணோக்கியின் செயல்பாடுகள் குறித்தும் அதன் பயன்பாடு குறித்தும் விளக்கியதோடு, அவர்களையும் பார்க்கச் செய்தோம்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!