வீட்டில் தேர்வுக்கு இனியன் படித்துக் கொண்டிருந்தான். கொய்யாப்பழம் ஒன்றை வெட்டி அதன் பாதியை அடுப்படியில் வைத்துவிட்டு ஒரு பாதியை தின்றுவிட்டான். மறுபாதி அங்கேயே இருந்தது. சிறிது நேரத்தில் அந்த பழத்தைச் சுற்றிஒரு சிறிய பூச்சி பறந்து கொண்டிருந்தது. அதனை பிடித்து பார்க்க முயற்சி செய்தேன். ஆனால் என்னால் பிடிக்க முடியவில்லை. பலமுறை முயற்சி செய்தும் பிடிக்க முடியவில்லை. நேற்றும் அதே போல் இன்று மக்காச்சோளம் வைக்கப்பட்டிருந்ததை சுற்றியும் அதே பூச்சி சுற்றிக்கொண்டிருந்தது. அதை எப்படி பிடிப்பது என்று யோசித்த போது ஒரு பெரிய கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் பையை வைத்து பிடிக்கலாம் என்று முடிவு செய்தேன். இந்த வழிமுறையை மனுபிரகாஷ் லக்னோவில் நடைபெற்ற பயிற்சியின் போது கற்றுக்கொடுத்தது. அதன் அடிப்படையில் பிளாஸ்டிக் பையின் வாய் பகுதியை கொண்டு அந்த பூச்சியை பிடித்துவிட்டேன். நிறைய கிடைத்துவிட்டன. ஆனால் அதனை உயிருடன் பதிவு செய்ய முடியவில்லை. ஆனால் அதன் பாகங்களை பதிவு செய்தேன். இந்த பூச்சியினை வீட்டில் அஸ்வினி என்று சொல்லுகிறார்கள்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!