ரமேஷன் சார் ஓய்வு பெற்ற ஆசிரியர். குழந்தைகளுக்கு அறிவியலை கொண்டு செல்லவேண்டும் என்ற ஆர்வமிக்கவர். கோவையில் இருக்கிறார். நானும் அவரும் திருச்சியில் பிசப் கல்லூரியில் ஒரு பயிற்சி முகாமில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே நாங்கள் தங்கியிருந்த இடத்தில் காலை நடை பயணத்தில் அவர் பறவைகளின் இறகுகளையும், பூக்களின் மகரநதங்களையும் பதிவு செய்துகொண்டிருந்தார். இவர் 2015ம் ஆண்டு முதல் தவணை பயிற்சியின்போது பயிற்சி பெற்றவர். இரண்டாவது முறையும் பயிற்சி பெற்றவர். அதன் பிறகு தனது மகனிடம் சொல்லி கலிபோர்னியாவிலிருந்து மடிப்பு நுண்ணோக்கி வாங்கி மாணவர்களுக்கு கொடுத்துள்ளார். மிகச்சிறந்த அறிவியல் தொடர்பாளர்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!